Welcome To Arun Hearing Aid

  • +91 80125 70701
  • +91 94432 43171
degree-of-hearing-loss
செவித் திறன் இழப்பின் அளவு(தீவிரத் தன்மை) முறைகள் ?
February 16, 2021
How-to-protect-ear
காதை எவ்வாறு பாதுகாக்கலாம் ?
February 16, 2021

காதை குடையலாமா ? காது குடைவதால் ஏற்படும் விளைவுகள் ?

காது குடைவதை நாம் அனைவரும் ஒரு வழக்கமாகவே வைத்து வருகிறோம் .நம் கையில் கிடைக்கக்கூடிய சில பொருட்களை கொண்டு காது குடைவது மற்றும் காதில் உள்ள அழுக்கை எடுப்பதாக நினைத்து காது குடைவது போன்ற செயல்கள் எல்லாம் நம் காதிற்கு பெரும் தீங்கையும் ,பாதிப்பையும் ஏற்படுத்தும் .

காதுகள் ஆனது இயற்கையாகவே காதில் உள்ள அழுக்குகளை வெளியேற்றும் திறனை கொண்டுள்ளது .காதில் உள்ள மெழுகுகள் இதற்கு துணை புரிகின்றன .நம் கீழ்த்தாடையை கொண்டு உணவை மெல்லுவதும் ,பேசும்போது ஏற்படுகின்ற அசைவு ஆகியவை தொடர்ந்து ஒரு இயக்கமாக செயல்பட்டு வருகிறது .இந்த இயக்கத்தின் போது ,காதுக் குழாய்கள் காதுக்குள் இருக்கும் அழுக்கை தானாகவே வெளியேற்றுகிறது .
மாறாக ,ஒரு சிலர் எப்போதும் காதை குடைந்து கொண்டே இருப்பார்கள். காதை நீங்களே சுத்தப்படுத்தவேண்டிய அவசியமே கிடையாது. நம்முடைய உடம்பில் சேருகின்ற செக்ரியேஷன் என்கிற மிச்சங்கள்தான் வேக்ஸ் மெழுகு மாதிரியாக மாறுகிறது. இந்த மெழுகை சுத்தப்படுத்த வேண்டியதில்லை.இந்த அழுக்கானது விரைவில் காய்ந்து தானாகவே வெளியிறிவிடும் .

நம் காதிலுள்ள அழுக்கை சுத்தப்படுத்துவதாக நினைத்து காதை குடையும்போது ,அழுக்கு அல்லது மெழுகானது வெளியேறுவதற்கு பதிலாக உள்நோக்கி காதுகளின் கால்வாய்க்கு தள்ளப்படுகிறது .இதனால் காதுகளில் அடைப்பு மற்றும் காது வலி போன்றவைகள் ஏற்படுகின்றன .செவித் திறனில் குறைபாடு ஏற்படவும் இது வழி வகுக்கும் .

எனவே காது குடைவதை நாம் அனைவரும் முழுமையாக தவிர்க்க வேண்டும் . காது குடைவதானால் ஏற்படும் ஆபத்தை வெளிப்படுத்தி ,பெரும் விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் .