Welcome To Arun Hearing Aid

  • +91 80125 70701
  • +91 94432 43171
Meniere's-disease
காதில் ஏற்படும் மீனியர்ஸ் நோய் பாதிப்பு என்றால் என்ன ?
February 11, 2021
Congenital-deafness
பிறவி காது கேளாமை ஏற்படுவதற்கான காரணங்கள் ?
February 11, 2021

காதில் உள்ள குறும்பியை நீக்கலாமா?

காது குறும்பி என்பது காதை பாதுகாக்க இயற்கையாக அமைந்த ஒரு பாதுகாப்பு வளையம் தான் காது குறும்பி .நம் கண்களுக்கு இமையானது எப்படி பாதுகாப்பாக இருக்கிறதோ ,அதுபோல காதுகளுக்கு காது குறும்பி ஒரு பாதுகாப்பு .

காது குறும்பி ஆனது காதுக்குள் தூசி ,அழுக்கு மற்றும் வெளிப் பொருட்கள் நுழைவதை தடை செய்ய பயன்படுகிறது .நம் காதுக்குள் இருக்கும் செறுமினோஸ் சுரப்பிகள் தான் காது குறும்பியை சுரந்து ,செவிப்பறையை பாதுகாக்க உதவுகிறது .இந்த காது குறும்பியை நாம் அகற்ற தேவையில்லை ,அது தானாகவே காய்ந்து வெளியேறிவிடும்.
இயற்கையாகவே நாம் காது பகுதிக்குள் வாக்ஸ் எனும் திரவமானது சுரந்து கொண்டிருக்கிறது .காதிலுள்ள அழுக்குகள் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் செல்லும்போது ,தானாகவே வெளியே வந்துவிடுகிறது ,இதற்கு காரணமாக இருப்பது நம் காதில் சுரக்கும் வாக்ஸ் திரவமாகும் .எனவே குச்சி ,பேனா போன்ற கூர்மையான ஆயுதங்களை கொண்டு காதிலுள்ள அழுக்கை எடுப்பதை தவிர்க்க வேண்டும்.

பொதுவாக காதில் அழுக்கு சேர்வது ,காது அரிப்பு ,குறும்பி சேர்வது ,காது அடிக்கடி அடித்துக்கொள்வது மற்றும் காதில் சீழ் வருவது போன்ற பிரச்சனைகள் இருந்தால் விரைவில் மருத்துவரின் ஆலோசனையை பெற்று பின்பு காது சொட்டு மருந்துகளை பயன்படுத்தலாம் .