Welcome To Arun Hearing Aid

  • +91 80125 70701
  • +91 94432 43171
திருத்துறைப்பூண்டிக்கு அருகில் உள்ள காது கருவி மையம் எது ?
March 17, 2021
அரியலூருக்கு அருகில் உள்ள காது கருவி நிலையம் எது?
March 19, 2021

காதின் நலன் காக்க நாம் பின்பற்றவேண்டியவை?

மனித உடலில் காதுகள் ஒரு இன்றியமையாத உறுப்பு ஆகும். காதுகளுக்கு கேட்கும் திறன் மட்டுமல்லாமல் ,வேறு சில திறன்களும் இருக்கிறது. அவைகள், உடலின் சமநிலையை பாதுகாத்தல், கட்டுப்படுத்துதல் போன்ற முக்கிய பணிகளை செய்கிறது.எனவே இத்தகைய உறுப்பை நம் பேணி பராமரித்தல் அவசியமாகும். காதின் நலன் காக்க நாம் பல்வேறு வழிமுறைகளை முறையாக பின்பற்றுதல் அவசியமாகும்.
1. அடிக்கடி சளி, ஜலதோஷம் பிடிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும.
2. பென்சில், பேனா, பட்ஸ், குச்சி என்று பொருட்களை வைத்து காது குடைவதை அறவே தவிர்த்தல் நல்லது.
3. குளிர்ந்த நீரும் குளிர் பானங்களும் காதின் பாதுகாப்பைக் கெடுக்கும் என்பதால், இவற்றைக் குறைத்துக்கொள்வது நல்லது.
4. காதுக்கும் மூக்கிற்கும் தொடர்பு உள்ளதால், அடிக்கடி மூக்கை பலமாகச் சீந்துவது காது கேட்கும் திறனை குறைக்கும். எனவே, மூக்கை பலமாகச் சிந்தக்கூடாது.
5. காதுக்குள் காய்ச்சிய எண்ணெயை ஊற்றக்கூடாது.
6. சைனஸ், டான்சில் போன்றவற்றுக்கு உடனடியாக சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
7. காதுகளில் வாக்மேன், ஹெட்போன் அணிந்தாலும் மிகவும் குறைந்த அளவில் ஒலியை வைத்துக் கேட்க வேண்டும்.
8 சுற்றுவட்டாரத்தில் அதிக இரைச்சல் இருந்தால், காதில் பஞ்சை வைத்துக்கொள்ள வேண்டும்.
9. தொடர்ந்து செல்போனில் பேச நேரும்போது ஒரு காதிலிருந்து மற்றொரு காதுக்கு மாற்றி மாற்றிப் பேசுவது நல்லது
10. சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும்.
11. தினமும் தியானம்,உடற்பயற்சி செய்வது காது இரைச்சலைத் தடுக்க உதவும்.
12. மது அருந்துதல் மற்றும் புகைப்பிடித்தல் ஆகியவை காதின் நலனைப் பாதிக்கும் தன்மை கொண்டது.எனவே இதனை தவிர்த்தல் நல்லது.
13.விமான நிலையம், ஜெனரேட்டர் தொழிற்சாலைகள் போன்ற அதிக சத்தம் நிறைந்த இடங்களில் வேலை செய்பவர்களுக்குக் காது கேட்காமல் போகும் வாய்ப்பு அதிகம். இதனைத் தடுக்க காதில் பஞ்சை வைத்துக் கொள்ளலாம் அல்லது `இயர் பிளக்’ (Ear Plug) பொருத்திக்கொள்ளலாம். `இயர் மஃப்’ (Ear Muff) அணிந்து கொள்ளலாம்.